நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அந்தப் பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலமை ஏற்பட்டது. அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அங்கு விரைந்த பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.
தற்போது அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE